2012, மே 19 ஆந் திகதியிலிருந்து யூன் 10 ஆந் திகதி வரை நடாத்தப்பட்டுள்ள சிசினன புபுதுவ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மூன்று வாசிகசாலைகளானவை முறையே யட்டினுவர பிரதேச செயலகத்தின் வெரலகொல்ல, மினிபே பிரதேச செயகலத்தின் புடலுகஸ்யாய மற்றும் மாதம்பே பிரதேச செயலகத்தின் சுதுவெல்லவில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் ரூபா. 50,000/- பெறுமதியான புத்தகங்களின் மூன்று தொகுதிகள் மற்றும் மூன்று உருக்கு அலுமாரிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 44 தன்னார்வத் தலைவர்களுக்கு இவ் வாசிகசாலைகளினைப் பராமரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.






