பதினான்கு நமாடும் சேவைகளானவை 2012 யூன் 5 ஆந் திகதி தொடக்கம் 24 ஆந் திகதிக்கிடையேயான காலப்பகுதிகளில் யாழ்ப்பாணம், சங்கானை, கோப்பாய், கிண்ணியா, பொத்துவில், நாரஹென்பிட்ட, மஹரகம, கட்டுநாயக்க, கரந்தெனிய, வட்டுவ, ஹிங்குரக்கொட, சரணசிறிகம, நாத்தாண்டியா மற்றும் கடுவல போன்ற இடங்களில் நடாத்தப்பட்டுள்ளன. 381 மூக்குக் கண்ணாடிகள் (இரு பார்வைக் கண்ணாடி), 8041 குவிய மூக்குக் கண்ணாடிகள், 85 சக்கர நாற்காலிகள், 29 ஊன்றுகோல்கள், 42 கை யூன்றுகோல்கள் மற்றும் 01 ஹொமட்டுடன் கூடிய சக்கர நாற்காலியும் அங்கவீனமுற்ற நபர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.





