மகிந்த சிந்தனையின் கீழ் அங்கவீனமுற்ற நபர்கள் பல வசதிகளினைப் பெற்று வருகின்றனர் என சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரான கேமச்சந்ர கேவகே அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் அங்கவீனமுற்ற சமுதாயத்தில் 3% மானோர்களுக்கு அரச நிறுவனங்களிலும் மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பிரத்தியேகச் சுகாதாரப் பராமரிப்புச் செயற்பாடுகளும் அவர்களுக்காக முன்னெடுக்கப்படுகின்றது.
தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமையன்று (25 ஆந் திகதி) நடாத்தப்பட்ட ஊடக மகாநாட்டில் உரையாற்றியவேளையில் திரு. கேவகே அவர்கள் இக்கருத்துக்களினை வெளியிட்டார். இலங்கை விழிப்புலனற்றவர்களுக்கான சம்மேளனம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இவ் ஊடக மகாநாடு ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு மாற்றுத்திறன்களைக் கொண்ட பிரஜைகள் அனுதாபத்தினை எதிர்பார்க்காது சமுதாயத்திலிருந்து நேர்முகமான பார்வை மற்றும் சம அந்தஸ்தினையும் எதிர்பார்த்து நிற்பதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் 34 பேர்கள் வீதம் பல்வேறு மாற்றுத்திறன்களைக் கொண்ட 11,216 பேர்களுக்கு ரூபா. 3,000/- வீதம் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என மேலும் சுட்டிக் காட்டினார், மேலும் இவ் எண்ணிக்கையையும் மற்றும் தொகையையும் முறையே 16,600 பேர்கள் மற்றும் ரூபா. 5,000/- வரை அடுத்த வருடத்திலிருந்து அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு, வீடுகளினை நிர்மாணிப்பதற்கு ரூபா. 250,000/-, சுகாதாரப் பராமரிப்பு உதவிக்காக ரூபா. 20,000/0 மற்றும் சுய தொழிலினை மேற்கொள்வதற்காக ரூபா. 25,000/- வையும் பல்வேறு திறன்களைக் கொண்ட அங்கவீனமுற்ற நபர்களுக்கு வழங்கி வருகின்றது என அவர் தனது உரையில், மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நபர்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தில் சட்டவரைபு ஒன்று முன்வைக்கப்படுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேலும் அவர் குறிப்பிட்டார். 2002 ஆம் ஆண்டின் முடிவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு மாற்றுத்திறன்ளைக் கொண்ட ஏறக்குறைய 274,000 பேர்கள் உள்ளனர் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 72,000 பேர்கள் விழிப்புலனற்ற நபர்களாவர்.
இலங்கை விழிப்புலனற்றவர்களுக்கான சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

